2 வலம்புரி சங்குகளுடன் நால்வர் கைது 

by Staff Writer 01-10-2020 | 1:21 PM
Colombo (News 1st) இரண்டு வலம்புரி சங்குகளை 60 மில்லயன் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த நால்வர் காலி - இமதுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இமதுவ பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, ஹட்டன் பகுதிகளை சேர்ந்த இருவர், பண்டாரகம பகுதியை சேர்ந்த ஒருவருடன் இணைந்து வலப்புரி சங்குகளை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த வலம்புரி சங்குகளை கொள்வனவு செய்ய சென்றவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களை காலி பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்குகள் இரண்டையும் பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் நீதிமன்ற அனுமதி பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.