காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபிலவு மக்கள் மகஜர்

by Staff Writer 01-10-2020 | 11:38 AM
Colombo (News 1st) முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் தங்களின் காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று (30) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பல வருட காலமாக தாம் தமது காணிகளை பல இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிக்குமாறும் இவர்கள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.