by Staff Writer 01-10-2020 | 2:09 PM
Colombo (News 1st) கட்டான பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து 02 கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு 06 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
வர்த்தகரின் வீட்டிலிருந்த தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நேற்று (30) காலை காரொன்றில் சென்ற கொள்ளையர்களால் பணம் மற்றும் நகை ஆகியன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரில் 05 பேரும் மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.