மக்கள் சந்திப்பின் போது கல்லெறிந்த இருவர் கைது

சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பின் போது கல்லெறிந்த சந்தேகத்தில் இருவர் கைது

by Staff Writer 30-09-2020 | 4:17 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கல்கிசையில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது கல்லெறிந்த சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கல்கிசை - ரஷ்டம்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றைய சந்தேகநபர் கல்கிசை பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிசை - ரஷ்டம்வத்தையைச் சேர்ந்த 21 மற்றும் 40 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9.45 அளவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பில் கல்லெறிந்துள்ளனர். இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.