வர்த்தகர் வீட்டில் 3 கோடி ரூபா கொள்ளை

கட்டான 50 ஏக்கர் பகுதியில் வர்த்தகர் வீட்டில் 3 கோடி ரூபா கொள்ளை

by Staff Writer 30-09-2020 | 4:06 PM
Colombo (News 1st) கட்டான - 50 ஏக்கர் பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை சிலர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர். முகமூடி அணிந்த நிலையில் துப்பாக்கியுடன் வருகை தந்த சந்தேகநபர்கள் ஐவர் வீட்டில் இருந்தவர்களை மிரட்டி பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 9.30 அளவில் காரில் வருகை தந்தவர்களே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் காவலாளியும் வர்த்தகரும் வீட்டில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். தப்பிச்சென்ற சந்தேககநபர்களைத் தேடி கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.