by Staff Writer 30-09-2020 | 9:53 AM
Colombo (News 1st) மஹரகம பகுதியில் 1.1 கிலோகிராம் ஹெரோயினுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என பொலிஸார் கூறினர்.
மஹரகம உள்ளிட்ட பகுதிகளிலுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் வலையமைப்புடன் சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் காணப்பட்ட இலத்திரனியல் தராசுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.