பூவெலிகட வீட்டின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

பூவெலிகட வீட்டின் உரிமையாளருக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 29-09-2020 | 6:07 PM
Colombo (News 1st) கண்டி – பூவெலிகட சங்கமித்தா வீதியிலிருந்த ஐந்து மாடி வீடொன்று கடந்த வாரம் தாழிறங்கியதில் மூவர் உயிரிழந்தமை தொடர்பில், கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டின் உரிமையாளரான அநுர லெவ்கே, பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (29) முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபர் இன்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.