நானு ஓயாவில் 15 வயது மாணவி சடலமாக மீட்பு

by Staff Writer 29-09-2020 | 3:30 PM
Colombo (News 1st) நுவரெலியா - நானு ஓயா, டெஸ்போட் தோட்டத்தில் நீரோடையிலிருந்து மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டெஸ்போட் தோட்டத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவரே இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இன்று அதிகாலை 2.50 அளவில் குறித்த மாணவி வீட்டிலிருந்து காணாமற்போயிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணைக்கு பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். நானு ஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.