அதிக விலையில் தேங்காய் விற்பனை:56 பேர் மீது வழக்கு

அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்த 56 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு 

by Staff Writer 28-09-2020 | 6:29 PM
Colombo (News 1st) நிர்ணய விலைக்கு அதிகமாக தேங்காய் விற்பனை செய்த 56 வர்த்தகர்களுக்கு எதிராக இன்று (28) வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காணும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நாடளாவிய ரீதியிலான சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, மாத்தளை, பதுளை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். நாளை (29) அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.