சட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டுசென்ற ஒருவர் கைது

by Staff Writer 27-09-2020 | 2:28 PM
Colombo (News 1st) புத்தளத்தில் 04 கிலோகிராமுக்கும் அதிக தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி - களப்பு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மோட்டார்சைக்கிளினூடாக 04 கிலோ 485 கிராம் தங்கத்தை கொண்டு செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நாகவில்லு, பாலாவி பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று (27) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்