S.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்

S.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்

by Bella Dalima 26-09-2020 | 5:16 PM
Colombo (News 1st) மறைந்த பாடகர் S.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் S.P.பாலசுப்பிரமணியம் நேற்று (25) காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில், அவரது உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, S.P.பாலசுப்பிரமணியத்தின் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டு, 12.30 மணியளவில் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.