மக்களின் பிரச்சினைகளை ஆராய கிராமங்களுக்கு செல்லும் ஜனாதிபதி

by Staff Writer 26-09-2020 | 7:35 PM
Colombo (News 1st) கிராம மக்களுடனான சந்திப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதுளை - ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார். வீதி, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள மக்கள் தங்களின் குறைகளை இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.