அருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்

by Staff Writer 26-09-2020 | 7:07 PM
Colombo (News 1st) சர்வதேச மட்ட கடல் அலை சறுக்கல் போட்டிகள் அருகம்பை கடலில் இன்று ஆரம்பமாகின. இலங்கை கடல் அலை சறுக்கல் விளையாட்டு சங்கம், விளையாட்டுத்துறை அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு என்பன இணைந்து இந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 101 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றதுடன், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாளை (27) நடைபெறவுள்ளன. இறுதி நாள் வைபவமும் பரிசளிப்பும் நாளை பிற்பகல் 2 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.