S.P.பாலசுப்ரமணியம் காலமானார்

S.P.பாலசுப்ரமணியம் காலமானார்

by Staff Writer 25-09-2020 | 3:12 PM
Colombo (News 1st) பிரபல தென்னிந்திய திரைப்பட பாடகர் S.P.பாலசுப்ரமணியம் காலமானார். கொரோனா தொற்றுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி S.P.பாலசுப்ரமணியம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 51 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது மகன் S.P.B. சரண் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். S.P.பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார். 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளதுடன், 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். அவர் பத்ம ஶ்ரீ , பத்மபூஷன் உள்ளிட்ட இந்திய உயர் விருதுகளை பெற்றுள்ளார்.