20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை பரிசீலிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

by Staff Writer 25-09-2020 | 4:49 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனைக்கு பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். எதிர்வரும் 29 ஆம் திகதி குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் உயர் நீதிமன்றத்தில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்றும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.