யாழில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

by Staff Writer 25-09-2020 | 4:02 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுகளில் தொடர் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் துவிச்சக்கரவண்டி திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, திருடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை (26) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.