20 ஆவது திருத்தம்: பரிந்துரைகள் மாற்றங்களின்றி சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் உறுதியளித்ததாக விமல் தெரிவிப்பு

by Staff Writer 24-09-2020 | 4:56 PM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தம்மால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள், மாற்றங்கள் இன்றி பாராளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார். குறித்த குழுவுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட இறுதித் தீர்மானங்களை, அவ்வாறே சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் கூறியதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.