மீன் லொறியில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கேரள கஞ்சா பொலிஸாரிடம் சிக்கியது 

by Staff Writer 24-09-2020 | 10:35 AM
Colombo (News 1st) மீன் லொறியொன்றில் மறைத்து வைத்து 103 கிலோகிராம் கேரள கஞ்சாவை கொண்டுசென்ற இருவர் மன்னார் - மடு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மடு - புஞ்சிக்குளம் பொலிஸ் வீதித் தடையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். 103 கிலோகிராம் நிறையுடைய 49 பொதிகள் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எம்பிலிப்பிட்டிய பகுதியை சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.