கொட்டிகாவத்தை தகனசாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 24-09-2020 | 6:58 PM
Colombo (News 1st) கொட்டிகாவத்தை தகனசாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலமொன்றை தகனம் செய்த போது இன்று மாலை வாயுக் கசிவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.