வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்திற்கும் அதிக சாரதிகளுக்கு ஆலோசனை

by Staff Writer 23-09-2020 | 9:39 AM
Colombo (News 1st) கொழும்பு வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சாரதிகளை எதிர்வரும் சனிக்கிழமை பொலிஸ் மேலதிக படைத்திணைக்களத்துக்கு அழைத்து ஆலோசனை வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று (23) முதல் பஸ் முந்துரிமை வீதிப்பகுதி அலுவலக போக்குவரத்து மற்றும் பாடசாலை வேன்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ் முந்துரிமை வீதியில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக பஸ்கள் மற்றும் வேன்கள், மற்றும் பாடசாலை வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.