நிவாரண விலையில் தேங்காய் விற்பனை

நிவாரண விலையில் தேங்காய் விற்பனை

by Chandrasekaram Chandravadani 23-09-2020 | 8:02 AM
Colombo (News 1st) தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நிவாரண விலைக்கு மக்களுக்கு தேங்காயை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நடமாடும் சேவையினூடாக 60 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நேற்று (22) முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை கேந்திரமாகக் கொண்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேங்காய், கித்துள், பனை மற்றும் இறப்பர் அபிவிருத்தி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.