மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமனம்

by Staff Writer 22-09-2020 | 7:16 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று கையளித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலசிங்கம் பிரசாந்தன் தெரிவித்தார்.