சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது 

அனுமதிப்பத்திரமின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது 

by Staff Writer 22-09-2020 | 9:58 AM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மாடி குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 65 இலட்சம் ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 12 பேரையும் இன்று (22) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.