மேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்

மேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்

by Fazlullah Mubarak 21-09-2020 | 10:07 AM

கொரோனா தொற்றின் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வௌிநாட்டில் தங்கியிருந்த மேலும் 724 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து 268 பேரும் துபாயிலிருந்து 420 பேரும் இந்தியாவிலிருந்து 06 பேரும் ஜப்பானிலிருந்து 10 பேரும் நாடு திரும்பியுள்ளதாக COVID - 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இவர்கள், PCR பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது.