பல பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் நீர்வெட்டு

பல பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு

by Fazlullah Mubarak 21-09-2020 | 6:43 PM

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹேகித்த வீதிப்பகுதியில் நீர்விநியோக கட்டமைப்பில் இடம்பெறவுள்ள திருத்த வேலைகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வத்தளை, தெலங்கபாத, எவரிவத்தை, ஹேகித்த, பள்ளியாவத்தை, வெலிஅமுன, கலகஹதுவ, பலகல மற்றும் எலகந்த ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலபடுத்தப்படவுள்ளது.