by Fazlullah Mubarak 21-09-2020 | 12:43 PM
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு இன்று நடைபெற்றது.
20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த விசேட செயலமர்வு நடைபெறுவதாக நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை இன்று பிற்பகல் 3 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது