வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

by Staff Writer 20-09-2020 | 7:26 AM
Colombo (News 1st) வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் உள்நாட்டில் வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ஜிகே குறிப்பிட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபா வரை வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது. வாகனங்களின் விலை அதிகரித்துள்ள போதிலும், நாளாந்தம் வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.