'பரெல் ரஞ்சி' கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் 'பரெல் ரஞ்சி' கைது

by Staff Writer 20-09-2020 | 1:45 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரரான 'பரெல் ரஞ்சி' என அழைக்கப்படும் மொஹமட் ஃபாரூக் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ஹெரோயின், 20 கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபருடன் 31 வயதான யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதியிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இன்று (20) காலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.