கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்

கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்: மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 18-09-2020 | 4:29 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு தொடக்கம் காலி வரையிலான கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களை அண்மித்த பகுதிகளில் கடலலை 2.5 தொடக்கம் 3 மீட்டருக்கு மேலெழக்கூடுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்