உளநலம் பாதிப்புற்றோருக்கு சுவசெரிய அம்பியுலன்ஸ்

உளநலம் பாதிக்கப்பட்டோரை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்ல சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை

by Staff Writer 18-09-2020 | 3:49 PM
Colombo (News 1st) உளநலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையை பயன்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்ட செயற்பாடுகளை கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டார். அம்பியுலன்ஸ்களில் பணிபுரிவோருக்கு இதற்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. போக்குவரத்து துறையில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக, உளநலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் நோய் நிலமை அதிகரிப்பதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 1920 சுவசெரிய சேவையை உளநலம் பாதிக்கப்பட்டோருக்காக அடுத்த மாதம் தொடக்கம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.