சம்பூரில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

சம்பூரில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

by Staff Writer 17-09-2020 | 3:25 PM
Colombo (News 1st) திருகோணமலை - சம்பூரில் வெடிபொருட்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 17 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். திருகோணமலையை சேர்ந்த 22 மற்றும் 31 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.