காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பலி 

by Staff Writer 17-09-2020 | 11:24 AM
Colombo (News 1st) மொனராகலை - சியம்பலாண்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிராமத்திற்குள் புகுந்த யானையை விரட்ட முயற்சித்த போதே அவர் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரின் சடலம் சியம்பலாண்டுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்