முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு

முள்ளிவாய்க்காலில் காணி துப்புரவின் போது வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 16-09-2020 | 3:28 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்புரவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (15) சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியினை இன்று தோண்டுவதற்கு முல்லைத்தீவு பொலிசாரினால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது. இந்நிலையில், நிலத்தின் கீழ் புதைந்திருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.