முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான ஆலோசனை

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள ஆலோசனை

by Staff Writer 16-09-2020 | 8:01 AM
Colombo (News 1st) கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் இன்று (16) முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இடதுபக்க ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். வீதி ஒழுங்கு விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நேற்று மற்றும் நேற்று முன்தினங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். கொழும்பின் 4 பிரதான வீதிகளில் இன்று வீதி ஒழுங்கு விதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.