குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 16-09-2020 | 1:06 PM
Colombo (News 1st) நாவலப்பிட்டிய - கடியன்லேன பகுதியில் குளவி கொட்டியதில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான 68 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று (15) மதியம் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று (16) உயிரிழந்துள்ளார். மலையகத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நால்வர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் கடந்த 9 ஆம் திகதி பதிவானது. அன்னைறய தினத்தில் டயகம பகுதியில் 11 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். கடந்த 7 ஆம் திகதி புஸ்ஸல்லாவ - சோகம தோட்டத்தில் 7 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்.