தேங்காய் விலை அதிகரிப்பு

தேங்காய் விலை அதிகரிப்பு

by Staff Writer 16-09-2020 | 7:00 PM
Colombo (News 1st) நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல்களுக்கு அமைய, 2019 ஆம் ஆண்டு 2.8 பில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 1.8 பில்லியன் தேங்காய் வீட்டுப் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று (16) சந்தையில் தேங்காயின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நாட்டின் பல பிரதேங்களில் இருந்தும் அறியக்கிடைத்தது.