அவிசாவளை வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு 

அவிசாவளை வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு 

by Staff Writer 16-09-2020 | 10:34 AM
Colombo (News 1st) அவிசாவளை - திவுரும்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (16) அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் 48, 53 மற்றும் 57 வயதுடைய நாதுன்கொல்ல மண்டாவளை பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.