மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 16-09-2020 | 3:37 PM
Colombo (News 1st) நாளை மறுதினம் (18) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நாளை மறுதினம் முதல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டை ஊடறுத்து வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.