by Staff Writer 15-09-2020 | 11:50 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, ஹெரோயினுடன் 185 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 99 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (14) காலை 06 மணி தொடக்கம் இன்று (15) அதிகாலை 05 மணி வரை இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது கேரள கஞ்சாவுடன் 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.