கேரள கஞ்சாவும் மஞ்சளும் பறிமுதல்: நால்வர் கைது

மன்னாரில் கேரள கஞ்சாவும் மஞ்சளும் பறிமுதல்: நால்வர் கைது

by Staff Writer 15-09-2020 | 4:00 PM
Colombo (News 1st) மன்னார் - உயிலங்குளம், புதுக்குடியிருப்பு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 52 கிலோ 353 கிராம் கேரள கஞ்சாவும், 920 கிலோ 250 கிராம் மஞ்சளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் மன்னார் பொலிஸாரும் இணைந்து இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் அடங்கலாக 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 17,25,000 ஆயிரம் ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நூறு அமெரிக்க டொலர் தாள்கள் ஐந்தும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயிலங்குளம், உப்புக்குளம், மருதமடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்