fd ghofig hjfoi gju dfpgijup

by Fazlullah Mubarak 14-09-2020 | 11:16 AM

பூசா சிறைச்சாலையில் கைதிகள் 25 பேர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தொடர்ந்தும் 20 கைதிகள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடைமுறைகளை இலகுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 45 கைதிகளால் கடந்த 10 ஆம் திகதி உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.