தங்க சுரங்கம் இடிந்தது: 50 தொழிலாளர்கள் பலி

கொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழப்பு

by Bella Dalima 12-09-2020 | 4:22 PM
Colombo (News 1st) மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா தங்க சுரங்கத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பலத்த மழை காரணமாக சுரங்கம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது, சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். ஒருவரால் கூட வௌியில் வர முடியாத நிலையில், 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.