by Staff Writer 12-09-2020 | 3:53 PM
Colombo (News 1st) மட்டக்களப்பில் நீண்ட நாட்களாக வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவற்கேணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாளும் கைக்குண்டும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.