போகம்பறை சிறையை கையகப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் கையகப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 11-09-2020 | 4:23 PM
Colombo (News 1st) கண்டி - போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் கையகப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். சிறைச்சாலைகளுக்குள் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், போகம்பரை சிறைச்சாலையை மீள கையகப்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதற்கமைய, விளக்கமறியல் சிறையில் உள்ள கைதிகளை தற்காலிகமாக போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.