பாராளுமன்ற அமர்வுகளுக்கான நேர அட்டவணையில் மாற்றம்

பாராளுமன்ற அமர்வுகளுக்கான நேர அட்டவணையில் மாற்றம்

by Staff Writer 11-09-2020 | 4:30 PM
Colombo (News 1st) அடுத்த பாராளுமன்ற அமர்வில் இருந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்தும் நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பாராளுமன்ற அமர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பிற்பகல் 4.30 முதல் மாலை 5.30 வரை சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.