by Staff Writer 11-09-2020 | 4:39 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து இடைக்கால குழுவொன்றின் மூலம் நிர்வகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்ட திட்டங்களுக்கு முரணானது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழுத்தத்தினால் தென்னாபிரிக்க கிரிக்கெட் குழாத்தினால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போயுள்ளதாகவும் சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.