தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் கைது

by Staff Writer 10-09-2020 | 3:45 PM
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் உதவியாளர் ஒருவர் கொழும்பு - புதுக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக்குழு உறுப்பினரான மொஹமட் ஃபாருக் மொஹமட் ரிஸ்வான் என்பவரே கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.