சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸாகி ஜபார் சடலமாக மீட்பு

by Staff Writer 10-09-2020 | 3:21 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பத்திரிகை ஊடகவியலாளரான ஸாகி ஜபார் (Zacky Jabbar) அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய தலங்கம - அக்குரேகொட பகுதியில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஸாகி ஜபார் ஐந்து நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். 60 வயதான சிரேஷ்ட பத்திரிகை ஊடகவியலாளர் ஸாகி ஜபார் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.