போதைப்பொருள் குற்றவாளிகளுக்காக சட்டத்திருத்தம்

போதைப்பொருள் குற்றவாளிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 10-09-2020 | 3:30 PM
Colombo (News 1st) போதைப்பொருள் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது தொடர்பில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளாக அடையாளங்காணப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பளிக்கும் முறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். விளக்கமறியல் சிறைச்சாலையில் 29,000 கைதிகள் உள்ளதாகவும், அவர்களில் சுமார் 8000 பேர் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.