பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

by Staff Writer 09-09-2020 | 2:16 PM
Colombo (News 1st) அரச பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவ பீடத்திற்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 369 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019 கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். இதனைத்தவிர பொறியியல், விவசாயம், கலை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பீடங்களுக்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. குறித்த பீடங்களுக்காக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதற்கான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மேலும் 20,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதற்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.